Saturday 27th of April 2024 10:49:27 AM GMT

LANGUAGE - TAMIL
-
பளை - இலங்கை வங்கியில் ஆறு பேருக்கு கொரோனா! ஒருவருக்கு மீள் பரிசோதனை!

பளை - இலங்கை வங்கியில் ஆறு பேருக்கு கொரோனா! ஒருவருக்கு மீள் பரிசோதனை!


கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளை இலங்கை வங்கிக் கிளையில் பணியாற்றும் ஆறுபேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினைச் சேர்ந்த 16 பேருக்கு நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அவர்களில் ஆறு பேர் தொற்றாளர்களாக அடையளாம் காணப்பட்ட அதேவேளை ஒருவருக்கு மீள் பரிசோதனை செய்யப்படவேண்டியுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் குறித்த தகவல்களின் அடிப்படையில்,

இலங்கை வங்கியின் பளைக் கிளையில் பணியாற்றும் ஊழியர்கள் நால்வரும் அங்கு பயிற்சியாளர்களாக பணியாற்றும் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பகுதிக்குப் பொறுப்பான சுகாதாரத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE